Friday, October 4, 2013

மட்டற்ற மகிழ்ச்சி

             திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது..... நான்கு வயதில் ஒரு அழகான பெண் குழந்தைக்கு தாய்........ மீண்டும் தற்போது கருவுற்றிருக்கிறேன்... இதை உறுதி செய்தது ஜுலை16 அதிகாலை 3:30 மணிக்கு. கணவன் நல்ல உறக்கத்தில் இருந்தார் எழுப்பவில்லை, அதற்கு பதில் அவர் கைபேசிக்கு செய்தி அனுப்பிவிட்டு உறங்கினேன்............. 

            காலை 6:30க்கு அவர் கைபேசியில் அலாறம் அடித்தது என் காதில் கேட்டது ஆனால் கண்கள் திறக்க முடியாத உறக்கம், தூக்கம் கலைந்த என் கணவர் அன்று பார்த்த முதல் நல்ல செய்தி தான் இரண்டாவதாக அப்பா ஆகப்போகும் அந்த நல்ல செய்தி, படித்ததும் உறங்கிய என்னை தொந்தரவு செய்யாமல் என் தலையை தடவி என் கன்னத்தில் ஒரு அன்பான குட்டி முத்தமிட்டு எழுந்தார், அடுத்த நொடியே நான் கண் விழித்தேன்........... 

           இதை இங்கு பதிய காரணம் கேட்கலாம்...... இவ்வுலகில் எதயும் எதிர்பாராமல் கணவன்,மனைவிக்கு இடையில் கிடைக்கும் விலை மதிப்பிலாத சந்தோஷம்,புதிதாய் வரப்போகும் அந்த பூந்தளிரால் தானே!!!!!!  

No comments:

Post a Comment