Wednesday, June 19, 2013

ரயில் பயணம்

ஜுன்15 2013

                  ஒரு அரசாங்க பணிக்காக தேர்வு எழுத சென்றேன், எனக்கு பிடித்த என்னவனுடன்.... அவனை பார்வையால் ரசித்த படி என் மொபைல் போனில் டைப் செய்த சில வரிகள் இங்கே பகிர்வதில் ஒரு சிறிய ஆனந்தம்......


            "இணையாமல் போகும் தண்டவாளத்தில் தட தடவென ஓடும் ரயிலில் எதிரே அமர்ந்திருக்கும் உன்னை பார்த்து ரசிக்க என் மனம் தடம் புரலாமல் தவிக்கின்றது"


           "சில மணி நேரம் என் பார்வை என்ற சிறையில் உன்னை அடைத்து வைத்ததர்க்கு நீ கடவுளை வஞ்சிக்கிராய்..... நான் அந்த இடைப்பட்ட நேரத்தில் என் காதலை சுவாசிக்கிறேன் என் பார்வை வழியாக"

          "இன்னும் சற்று நேரத்தில் என் பார்வை சிறையில் இருந்து உனக்கு விடுதலை, என் காதல் சுவாசம் நிர்க்க போகும் நேரம்..... இப்போது நான் வஞ்சிக்கிரேன் அந்த கடவுளை, இந்த பயணம் இன்னும் தொடர கூடாதா என்று"  

         

No comments:

Post a Comment